பேச்சுவார்த்தைகளுக்கான அமெரிக்காவின் உறுதிப்பாடு குறித்து ஈரானின் அராக்சி சந்தேகம் எழுப்பினார்


இராஜதந்திரம் குறித்து அமெரிக்கா உண்மையிலேயே தீவிரமாக உள்ளதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்று ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறினார்.

அராக்சி பாகிஸ்தானுக்குச் சென்றார். அங்கு அவர் மூத்த அதிகாரிகளைச் சந்தித்தார். ஆனால் அமெரிக்க அதிகாரிகளைச் சந்திக்கவில்லை.

போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு நடைமுறைக்கு உகந்த கட்டமைப்பு குறித்த ஈரானின் நிலைப்பாட்டை நான் பகிர்ந்துகொண்டேன். ஆனால் இராஜதந்திர விடயங்களில் அமெரிக்கா உண்மையிலேயே தீவிரமாக உள்ளதா என்பதை நான் இன்னும் பார்க்கவில்லை என்று கூறினார்.

பேச்சுவார்த்தைகளுக்காக வாஷிங்டன் இனி இஸ்லாமாபாத்திற்கு தூதர்களை அனுப்பாது என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியதைத் தொடர்ந்து இந்தக் கருத்துகள் வெளியாகின.

No comments