ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 21 பேர் தூக்கிலிடப்பட்டனர் என ஐ.நா
ஈரானில் போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 21 பேர் தூக்கிலிடப்பட்டனர் என ஐ.நா. தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து குறைந்தது 21 பேர் தூக்கிலிடப்பட்டதாகவும், 4,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவற்றில் ஒன்பது ஜனவரி மாதப் போராட்டங்கள் தொடர்பாகவும் , பத்து எதிர்க்கட்சிக் குழுக்களில் உறுப்பினராக இருந்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலும், இரண்டு உளவு குற்றச்சாட்டுகளின் பேரிலும் தூக்கிலிடப்பட்டதாக அந்த அலுவலகம் தெரிவித்தது.
இந்த மரணதண்டனைகள் குறித்துத் தாம் பேரதிர்ச்சி அடைந்ததாக ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் வோல்கர் துர்க் கூறினார். மேலும், மோதலின் தாக்கங்களுக்கு மேலாக, ஈரானிய மக்களின் உரிமைகள் அதிகாரிகளால் கடுமையான மற்றும் மிருகத்தனமான வழிகளில் தொடர்ந்து பறிக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.

Post a Comment