ஈரான் அணு ஆயுதப் பயன்பாட்டில் இருந்து பின்வாங்கினால், அமெரிக்கா அந்நாட்டை செழிக்கச் செய்யும் - ஜே.டி. வேன்ஸ்
ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நம்பிக்கையின்மையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வேன்ஸ் கூறியுள்ளார் .
ஆனால் ஈரானியப் பேச்சுவார்த்தையாளர்கள் ஒரு உடன்பாட்டை எட்ட விரும்பினர் என்று அவர் செவ்வாய்க்கிழமை மாலை கூறினார்.
முன்னர் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையேயான பேச்சுவார்த்தைகள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் மீண்டும் தொடங்கக்கூடும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்தார்.
கடந்த வார இறுதியில் பாகிஸ்தானில் நடைபெற்ற முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையில் வான்ஸ் அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை தாங்கினார். ஒரு நாளுக்குள் முடிவடைந்த அந்தப் பேச்சுவார்த்தை, வெளிப்படையான தோல்வியில் முடிந்தது.
நிச்சயமாக, ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே மிகுந்த அவநம்பிக்கை நிலவுகிறது. அந்தப் பிரச்சனையை ஒரே இரவில் தீர்த்துவிட முடியாது என்று வேன்ஸ் கூறினார்.
டிரம்ப் ஒரு சிறிய ஒப்பந்தத்தை அல்ல, மாறாக ஒரு மாபெரும் பேரத்தை செய்ய விரும்பினார் என்றும் வேன்ஸ் கூறினார்.
வேன்ஸின் கூற்றுப்படி, டிரம்ப் ஈரானிடம், நீங்கள் அணு ஆயுதம் வைத்திருக்க மாட்டோம் என்று உறுதியளித்தால், நாங்கள் ஈரானைச் செழிக்கச் செய்வோம் என்று கூறிக்கொண்டிருந்தார்.
இந்த ஒப்பந்தம் ஈரானை வளப்படுத்தி, உலகப் பொருளாதாரத்தில் இணையச் செய்யும் என்று அமெரிக்கத் துணை அதிபர் கூறினார்.

Post a Comment