ஈரானின் புதிய தலைவரின் முல் அறிவிப்பு: பழிவாங்குவோம் என்றும் சபதம்
பிப்ரவரி 28 அன்று இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் தனது தந்தை அலி கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி இஸ்லாமியக் குடியரசின் தலைவராகப் பொறுப்பேற்ற பின்னர் இன்ற வியாழக்கிழமை தனது முதல் பொது அறிக்கையை வெளியிட்டார்.
ஈரானின் உச்ச தலைவர், ஈரானின் வளைகுடா அண்டை நாடுகள் மீதான தாக்குதல்கள் தொடரும் என்றும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருக்கவும், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தை முடக்கவும் அழைப்பு விடுத்தார்.
காமெனி கேமராவில் தோன்றவில்லை. மேலும் அவரது அறிக்கையை அரசு தொலைக்காட்சியில் ஒரு செய்தி தொகுப்பாளர் வாசித்தார்.
இஸ்ரேலிய உளவுத்துறை, காமெனியின் தந்தை மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களைக் கொன்ற தாக்குதலில் அவர் காயமடைந்ததாக மதிப்பிட்டுள்ளது. நேற்றுப் புதன்கிழமை அவர் ஏன் இன்னும் பொதுவில் தோன்றவில்லை அல்லது அறிக்கை வெளியிடவில்லை என்ற ஊகங்களுக்கு மத்தியில் இது பரவலாகப் பேசப்பட்டது.
அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடங்கிய 13 நாள் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு பழிவாங்குவோம் என்றும் காமெனி சபதம் செய்தார்.

Post a Comment