லூவ்ரே கொள்ளையில் கைவிடப்பட்ட பேரரசியின் கிரீடம் முழுமையாக மீட்டெடுக்கப்பட்டது
பிரான்சில் கடந்த ஆண்டு லூவ்ரேயில் நடந்த ஒரு துணிச்சலான கொள்ளையில் தப்பி ஓடிய திருடர்களால் கைவிடப்பட்ட பிரெஞ்சு பேரரசி யூஜெனியின் கிரீடம் கிட்டத்தட்ட அப்படியே உள்ளது. மேலும் அக்கீரீடம் முழுமையாக மீட்டெடுக்கப்படும் என்று லூவ்ரே அருங்காட்சியகம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.
கடந்த அக்டோபரில் புகழ்பெற்ற பாரிஸ் அருங்காட்சியகத்தைக் கொள்ளையடித்த திருடர்கள் சுமார் 88 மில்லியன் யூரோக்கள் ($104 மில்லியன்) மதிப்புள்ள நகைகளைத் திருடிச் சென்றனர், ஆனால் அவர்கள் தப்பிச் செல்லும்போது பேரரசியின் வைரம் மற்றும் மரகதம் பதித்த கிரீடத்தைக் கீழே போட்டுவிட்டு ஓடினர். அக்கீரீடம் கீழே விழுந்தபோது அது நொறுங்கி உடைந்து.
புலனாய்வாளர்கள் கொள்ளையடிக்கப்பட்ட நகைகளைக் இதுவரை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் திருடர்களைால் கீழே போட்ட மட்டும் கிரீடத்தை மீட்டனர்.
அக்கீரீடம் மிகவும் மோசமாகச் சேதமடைந்தது. ஆனால் அது உருக்குலையாமல் அப்படியே இருப்பதால் அதனை புனரமைக்கவேண்டிய தேவையில்லாமல் அதன் அசல் வடிவத்திற்கு மீண்டும் கொண்டு வரமுடியும் என லூவ்ரே அருங்காட்சியகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
கண்ணாடிப் பெட்டியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த ஒரு குறுகிய துளை வழியாக திருடர்கள் அதை அகற்ற முயன்றபோது கிரீடம் சேதமடைந்ததாக அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
எட்டு தங்க கழுகுகளில் ஒன்றைத் தவிர, கிரீடத்தின் அனைத்து பாகங்களும் இன்னும் இருப்பதாக லூவ்ரே கூறியது.
இது அதன் 56 மரகதங்களையும், அதன் 1,354 வைரங்களில் 10 தவிர மற்ற அனைத்தையும் தக்க வைத்துக் கொண்டுள்ளது என்று அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது.
போட்டித் தேர்வு செயல்பாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தகுதிவாய்ந்த நிபுணரால் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பை மேற்பார்வையிட அருங்காட்சியகத்தின் தலைவர் லாரன்ஸ் டெஸ் கார்ஸ் தலைமையிலான ஒரு நிபுணர் குழு தேர்ந்தெடுக்கப்பட்டதாக அது கூறியது.
கொள்ளைக் குழுவில் இருந்ததாகக் கூறப்படும் நான்கு பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர், ஆனால் மூளையாகச் செயல்பட்டவரையோ அல்லது மீதமுள்ள நகைகளையோ கண்டுபிடிக்க முடியவில்லை.
மூன்றாம் நெப்போலியனின் மனைவி யூஜெனிக்கு சொந்தமான வைரம் பதித்த தலைப்பாகை உட்பட எட்டு நகைகளை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.



Post a Comment