யாழில் 6 மில்லியன் மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றல்
யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இலங்கை கடற்படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது கடற்கரையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 26 கிலோ 900 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கஞ்சாவின் மொத்த மதிப்பு ஆறு மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை கைப்பற்றப்பட்ட கஞ்சா தொகை சட்ட நடவடிக்கைக்காக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment