ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி தலைவர்கள் சந்திப்பு!

 


இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், இந்திய வம்சாவளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை இன்று (23) கொழும்பில் உள்ள இந்திய மாளிகையில் சந்தித்தார்.

இலங்கைக்கு இந்தியா வழங்கிய 450 மில்லியன் டொலர் உதவித் தொகைக்கு ஜெய்சங்கருக்கு குழு நன்றி தெரிவித்ததாக தமிழ் முற்போக்கு கூட்டணி  தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து தோட்ட சமூகங்கள் எதிர்கொள்ளும் கடுமையான சேதத்தை அவர் எடுத்துரைத்தார், மேலும் வீட்டுவசதிக்கு பாதுகாப்பான நிலத்தின் அவசியத்தை வலியுறுத்தினார்.


No comments