உத்தியோகபூர்வமாக வடக்கில்!





நிவாரண பணிகளுக்கு  நேற்றைய தினம் கொழும்புக்கு வருகை தந்த  அமெரிக்கா விமான படையின் விமானம்  இன்றைய தினம் காலை நிவாரண பொருட்களுடன் கொழும்பில் இருந்து புறப்பட்டு, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியிருந்தது.

நாடு முழுவதும் நிவாரண பணிகளுக்கு அமெரிக்காவிமான படையின் இரு  விமானங்கள் வருகை தந்துள்ளதுடன் இலங்கை விமான படையினருடன் இணைந்து பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் வடமாகாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பொருட்களை வழங்கும் முகமாக , கொழும்பில் இருந்து புறப்பட்ட அமெரிக்க விமானம் யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளது.

இதனிடையே வெளிநாடுகளிலிருந்து பெறப்படும் அனர்த்த நிவாரண நிதி உதவியை  நிர்வகிக்க இலங்கை பாதுகாப்பு பிரதி அமைச்சர் தலைமையில் தேசிய உயர்மட்டக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் உதவிகள் மற்றும் உபகரணங்கள் அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்குச் சரியாகக் கிடைப்பதை குழு உறுதி செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments