தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கிச் சூட்டில் மூன்று குழந்தைகள் உட்பட 11 பேர் பலி!


தென்னாப்பிரிக்க நகரமான பிரிட்டோரியாவில் உள்ள ஒரு சட்டவிரோத மதுபான விடுதியில் சனிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் மூன்று வயது சிறுவன் உட்பட குறைந்தது 11 பேர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர், மேலும் அடையாளம் காணப்படாத மூன்று சந்தேக நபர்களைத் தேடும் பணி தொடங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

சவுல்ஸ்வில்லே டவுன்ஷிப்பில் நடந்த சம்பவத்தின் போது மேலும் 14 பேர் காயமடைந்ததாக அவர்கள் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூடு "ஷெபீன்" என்று உள்ளூரில் அழைக்கப்படும் சட்டவிரோத மதுக்கடைக்குள் நடந்ததா அல்லது வெளியே நடந்ததா என்பது குறித்து போலீசார் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

"இறந்தவர்களில் மூன்று சிறுவர்களும் அடங்குவர், அவர்களில் 3 மற்றும் 12 வயது சிறுவர்கள் (மற்றும் ஒரு) 16 வயது பெண் அடங்குவர்" என்று தென்னாப்பிரிக்க காவல் சேவை தெரிவித்துள்ளது.

தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும், சராசரியாக ஒரு நாளைக்கு 60 கொலைகள் நடக்கின்றன.

No comments