யாழ் நல்லூரில் தேசியத் தலைவரின் 71 வது அகவையைக் கொண்டாடிய மக்கள்
தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனின் 71 ஆவது பிறந்த தினம் இன்று நல்லூரில் கொண்டாடப்பட்டது.
நல்லூரிலுள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்திற்கு முன்பாக மாவீரர்களின் பெயர் பொறிக்கப்பட்ட கல்வெட்டு அமைந்துள்ள நினைவாலயத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது பொங்கல் பொங்கி மக்களுக்கு பரிமாறப்பட்டது, அத்தோடு கேக், இனிப்பு மற்றும் மர கான்றுகள் உள்ளிட்டவையும் மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.



Post a Comment