யாழில். வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்து - இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் திங்கட்கிழமை உயிரிழந்துள்ளார்.

வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.

யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம் திகதி பணி முடிந்து , தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது , வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்துக்களான நிலையில் ,  படுகாயங்களுடன் , யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். 

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments