வீடொன்றில் இருந்து சடலங்கள் மீட்பு - ஐஸ் போதைப்பொருள் பெக்கெட்களும் மீட்பு


தங்காலை சீனிமோதர பகுதியில்புதிதாக கட்டப்பட்டு வரும் வீடொன்றில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

விசாரணையின் போது, ​​வீட்டிற்கு அருகிலுள்ள ஒரு லொறியில் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய 10 பெக்கெட்டுகளையும் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கிடையில், வீட்டில் இருந்த மற்றொரு நபர் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக தங்காலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் உயிரிழந்தார். 

சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ள நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளதுடன், இந்த சம்பவம் குறித்து அரச இரசாயன பகுப்பாய்வாளரால் பரிசோதனையும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments