வடக்கினை தாண்டி புத்தளம் கடத்தல் மையமாகியது!
கடல் வழியாக கொண்டு வரப்பட்ட அதிசக்தி வாய்ந்த மோட்டார் சைக்கிள்கள் புத்தளம் தலவில மற்றும் நாவக்காடு பகுதிகளில் நடத்திய கூட்டு சோதனையில் அகப்பட்டுள்ளது,
கடல் வழியாக கொண்டு வரப்பட்டதாகக் கூறப்படும் சுமார் ரூ.30 மில்லியன் மதிப்புள்ள ஐந்து உயர் சக்தி மோட்டார் சைக்கிள்கள் சந்தேக நபர்களுடன் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்கள், நாட்டிற்குள் கொண்டு வர தடைசெய்யப்பட்ட 800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட நான்கு மோட்டார் சைக்கிள்கள் என்றும், எந்த சட்ட ஆவணங்களும் இல்லாமல் மறைத்து வைக்கப்பட்டிருந்த 250 எஞ்சின் திறன் கொண்ட ஒரு மோட்டார் சைக்கிளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
800 மற்றும் 400 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்கள் நாட்டில் பதிவு செய்யப்படவில்லை என்றும், 250 எஞ்சின் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள் பதிவு செய்யப்பட்டதாகவும், ஆனால் போலியான இலக்கத் தகடுகள் இருந்ததாகவும் சோதனையில் பங்கேற்ற அதிகாரிகள் தெரிவித்தனர்.
Post a Comment