யாழில் தாக்குதல் அச்சத்தில் காவல்துறை!
பொன்னாலை கடற்பரப்பில் இலங்கை கடற்படை ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா கடத்தல் முறியடிக்கப்பட்ட நிலையில் காங்கேசன்துறை பகுதியில் உள்ள பத்து காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக காங்கேசன்துறை பொலிஸிற்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே மிரட்டல் அழைப்பு குறித்து விசாரணையைத் தொடங்கியிருப்பதாக ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
காங்கேசன்துறை பொலிஸ் நிலையான தொலைபேசியில் நபரொருவர் காங்கேசன்துறை பகுதியில் உள்ள பத்து காவல் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து பணியில் இருந்த அனைத்து அதிகாரிகளும் பாதுகாப்புப் பணிகளில் தங்கள் கடமைகளைச் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
இவ்வாறான நிலையில் பொலிஸிற்கு வந்த மிரட்டல் அழைப்பு குறித்து விசாரணை இடம்பெற்றுவருவதாக ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
Post a Comment