கஞ்சாவால் குவியும் யாழ்ப்பாணம்?



பொன்னாலை காட்டுப்பகுதியூடாக கஞ்சா கடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டு 240 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது. 

அத்துடன் மாதகலைச் சேர்ந்த நபர் ஒருவர்  கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் கூறப்படுகின்றது. இன்று சனிக்கிழமை மதியம் இச்சம்பவம் இடம்பெற்றது. 

கடந்த சில வருடங்களுக்கு முன்னரும் பொன்னாலை இளைஞர்கள் இதேபோன்ற கஞ்சா கடத்தல் ஒன்றை  முறியடித்து பெருந்தொகை கஞ்சாவை கைப்பற்றி பொலிஸாரிடம் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments