கரைச்சிப் பிரதேச சபையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள் குறித்த ஆளுனரிடம் மனு கையளிப்பு
கரைச்சிப் பிரதேச சபையின் ஆளணிகளின் தேவைப்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட உறுப்பினர்கள் வடமாகாண ஆளுநரை நேரில் சந்தித்து மனு ஒன்றினையும் கையளித்துள்ளனர்.
கிளிநொச்சி, கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அ.வேளமாலிகிதன் தலைமையில் பிரதேச சபையின் உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் இன்றைய தினம் வியாழக்கிழமை ஆளுநர் செயலகத்தில் ஆளுநரை சம்பிரதாயபூர்வமாக சந்தித்துக் கலந்துரையாடி குறித்த மனுவினையும் கையளித்துள்ளனர்.
Post a Comment