மட்டக்களப்பில் காயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஜெயந்திபுரம் பிரதேசத்தில் வீடு ஒன்றில் தனிமையில் வசித்து வந்த ஆண் ஒருவர் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் சடலமாக திங்கட்கிழமை (26) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஜெயந்திபுரம் குமாரத்தன் கோவில் வீதியைச் சேர்ந்த 62 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வீட்டில் தனிமையில் வாழ்ந்து வருவதுடன் மரக்கறி வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்ற இவர் இன்று காலை வீட்டின் முன்பகுதி வாசலில் காயங்களுடன் உயிரிழந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிஸார் வீட்டின் வெளி கதவை உடைத்து உள் நுழைந்தது சடலத்தை மீட்டனர்.
பின்னர் தடவியல் பிரிவு பொலிஸாரை வரவழைத்தது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துவதற்கு நீதிமன்ற அனுமதியை பெற நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டன.
இது தொடர்பான மேலதிக விசரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment