காணி பிடிக்காதாம் அனுர அரசு!
வர்த்தமானி மூலம் சுவீகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்ட நிலங்கள் எந்த வகையிலும் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்படமாட்டாது என்றும், அந்தக் காணிகள் மூல உரிமையைக் கொண்டுள்ளவர்களிடம் திருப்பியளிக்கப்படுவதை உறுதிசெய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசாங்க தரப்பினால் உறுதிமொழி வழங்கப்பட்டுள்ளது.
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள காணிப் பிரச்சினைகள் தொடர்பாக பிரதமர், துறைசார் அமைச்சர் மற்றும் அரச அதிகாரிகளுடன் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றிருந்தது.
அதன்போது.வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் காணிகளை கையகப்படுத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன், காணிகளை உரிமையுள்ள மக்களுக்கு உடனடியாக வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேவேளை, வடக்கு மற்றும் கிழக்கில் காணி உரிமைகளைத் தீர்ப்பதற்கு முந்தைய அரசாங்கங்கள் மேற்கொண்ட நடைமுறைகள் பற்றி மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளது. காணி சொந்தகாரர்களான தமிழ் மக்களிடம் தங்கள் உரிமைகளை நிரூபிக்க எந்த ஆவணங்களும் இல்லை என வடக்கு மற்றும் கிழக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.
Post a Comment