சொன்னதைச் செய்வாரா? எம்.ஏ.சுமந்திரன்!


யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக முன்னாள் விரிவுரையாளர் சுந்தரமூர்த்தி கபிலன் இன்று உறுதியுரையினை செய்தார்.

யாழ்.மாவட்டத்திலுள்ள உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவாகியுள்ள உறுப்பினர்களின் உறுதியுரையேற்பு நிகழ்வு இன்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போதே தேசிய மக்கள் சக்தி சார்பில் தெரிவுசெய்யப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் தங்கள் உறுதியுரையினை மேற்கொண்டார்கள். இதில் யாழ் மாநகர முதல்வர் வேட்பாளராக போட்டியிட்ட(விகிதாசார பட்டியல் வேட்பாளர்) சுந்தரமூர்த்தி கபிலனும் யாழ் மாநகர சபை உறுப்பினராக உறுதியுரையினை மேற்கொண்டார்.
உள்ளூராட்சி மன்றங்களில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்விபரங்கள் அடங்கிய வர்த்தமானியும் இன்றைய தினம் வெளிவந்துள்ளது.
யாழ் மாநகர எல்லைக்குள் வசிக்காத தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர மேயர் வேட்பாளர் கபிலன் மேயராக அல்ல யாழ்ப்பாணம் மாநகர சபையின் உறுப்பினராக கூட பதவி வகிக்க முடியாது. உறுப்பினராக நியமித்த வர்த்தமானி அறிவித்தல் வெளிவந்த அடுத்த நாளே அதனை தடுப்பதற்கு வழக்கு தாக்கல் செய்வோம். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்நிலையில் உள்ளது என ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் முன்னர் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments