யாருக்கு சொந்தம்!
இலங்கை அரசினால் வெளியிடப்பட்ட சர்ச்சைக்குரிய நிலசுவீகரிப்பு வர்த்தமானி திரும்ப பெறப்பட்டுள்ளநிலையில் தமிழ் கட்சிகள் போட்டிபோட்டவாறு உரிமை கோரத்தொடங்கியுள்ளன.
வடக்கு மாகாணத்தில் நில தீர்வு தொடர்பாக கடந்த மார்ச் 28, அன்று வெளியிடப்பட்ட வர்த்தமானியையே அரசாங்கம் திரும்பப் பெற்றுள்ளது.
வடக்கு மாகாணத்தில் உள்ள பல கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயம், கால்நடை, நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சகத்தின் கீழ் உள்ள நில உரிமை தீர்வுத் துறையால் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
வடக்கைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசியல்வாதிகள், அரசாங்கம் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் திருப்பித் தருவதாக உறுதியளித்த போதிலும் மக்களின் நிலங்களைக் கையகப்படுத்த முயற்சிப்பதாகக் கூறி, வர்த்தமானிக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுவந்தது.
வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிப்பதற்கு வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் பிரதமர் சகிதம் பேச்சுக்கள் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment