தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 260 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு
தென்னாப்பிரிக்காவில், மீட்பு நடவடிக்கையின் போது தங்கச் சுரங்கத்தில் இருந்து 260 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். லிஃப்ட் பழுதடைந்ததால் அவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது.
மீட்பு நடவடிக்கையின் முதல் கட்டத்தில் 79 பேர் நிலத்தடி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பின்னர் மீதமுள்ளவர்கள் 6 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டதாகவம் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து மேற்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளூஃப் தங்கச் சுரங்கத்தின் ஆபரேட்டர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
வியாழக்கிழமை முதல் ஒரு விபத்தில் லிப்ட் சேதமடைந்ததால் 260 சுரங்கத் தொழிலாளர்கள் சுரங்கத்தில் சிக்கிக்கொண்டதாக சுரங்க நிறுவனமான சிபானி-ஸ்டில்வாட்டர் விளக்கியது.
அவசரகால வெளியேற்றங்கள் வழியாக மக்கள் வெளியேற்றப்படவில்லை, ஏனெனில் அவர்கள் அதிக தூரம் நடக்க வேண்டியிருக்கும். எந்த நேரத்திலும் காயம் ஏற்படும் அபாயம் இல்லை என்று அது மேலும் கூறியது.
சம்பவத்தைத் தொடர்ந்து சுரங்கத் தொழிலாளர்களின் உறவினர்கள் சுரங்க நுழைவாயிலில் கூடியிருந்தனர்.
சுரங்க நிறுவனத்தால் இயக்கப்படும் மிக ஆழமான சுரங்கங்களில் குளூஃப் தங்கச் சுரங்கமும் ஒன்றாகும். தென்னாப்பிரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் சுரங்க விபத்துகளில் டஜன் கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் இறக்கின்றனர். இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளில், மேம்பட்ட பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகள் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
Post a Comment