போப்பின் இறுதி நிகழ்வுகள்

மறைந்த போப்பாண்டவரின் இறுதிச் சடங்குகள் தொடங்கின. போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்கத்தில் 250,000 பேர் கலந்து கொள்வதாக வத்திக்கான் தெரிவித்துள்ளது. உலகத் தலைவர்கள் விழாக்களில் கலந்து கொள்வதால் ரோமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கு மற்றும் அடக்க விழாக்களுக்காக இலட்சக்கணக்கான மக்கள் புனித பீட்டர் சதுக்கத்தில் குவிந்தனர்.

தற்போதைய மற்றும் முன்னாள் அமெரிக்க அதிபர்கள் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன், ஜெர்மனியின் ஓலாஃப் ஸ்கோல்ஸ், பிரான்சின் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் பிரிட்டனின் இளவரசர் வில்லியம் உள்ளிட்ட பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்கின்றனர்.

90 நிமிட இறுதிச் சடங்கு திருப்பலியின் முடிவில், கார்டினல் ஜியோவானி பாட்டிஸ்டா ரே தலைமையில், போப்பின் உடலப் பேளை வத்திக்கானுக்கு வெளியே உள்ள ஒரு தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பிரான்சிஸ் பாரம்பரியத்தை மீறி, ரோமின் பிரதான தொடருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள செயிண்ட் மேரி மேஜர் பசிலிக்காவில் அடக்கம் செய்யப்படுவார். அங்கு அவரது பெயர் பிரான்சிஸ்கஸ் மட்டுமே கொண்ட ஒரு எளிய கல்லறை அவருக்கு காத்திருக்கிறது.

போப்பின் மறைவு உலகளவில் துக்கத்தைத் தூண்டியுள்ளது. கடந்த புதன்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை புனித பீட்டர் பசிலிக்காவில் போப்பின் உடல் அஞ்சலி செலுத்த 250,000 பேர் வரை கலந்து கொண்டனர்.

தற்போது போப்பின் இறுதி நிகழ்வுகள் நடைபெற்று முடிந்த பின்னர்  புனித பீட்டர் சதுக்கத்தில் இருந்து உடலம் அடக்கம் செய்யும் இடத்திற்று வாகனத்தில் வீதிவழியாக எடுத்துச் செல்லப்படுகிறது.

No comments