இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டன!


இரணைமடு குளத்தின் நான்கு வான் கதவுகள் இன்று சனிக்கிழமை (01)  திறக்கப்பட்டன.

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. 

எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கத்தில், இரணைமடு குளத்தின் நான்கு வான்கதவுகள் இன்றைய தினம் திறக்கப்பட்டன.

இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 

No comments