செயலக கூட்டங்கள் காற்றாடுகின்றன!


புதிய அரசின் கீழ் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டங்கள் வெறும் கூடிக்கலையும் கூட்டமாக மீண்டும் மாறிவிட்டதாக

குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

இதனிடையே நடந்து முடிந்த கூட்டங்களில் மக்கள் நலன் சார்ந்த எந்தவொரு தீர்க்கமான முடிவும் எடுக்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களில் இருக்கின்ற அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள் வினைத்திறனற்றவர்கள் என்பது போல காண்பிக்க முனையும் போக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அவர்களைப் பிழையானவர்களாக காட்டிக்கொள்வதுடன் அவர்கள் மீது குற்றங்களை சுமத்திக் கொள்ளப்படும் போக்கு அதிகாரிகளை கூட்டங்களில் பங்கெடுக்காது பின்னடிக்க வைக்கும் போக்கினை தோற்றுவித்துள்ளது.

அபிவிருத்திக்குழு கூட்டங்களில் தனிமனித தாக்குதல்கள் அரச உத்தியோகத்தர்களை முன்வைத்து நடாத்தப்படுகின்றது.

அதிகாரிகளை தனிப்பட்ட கோபதாபத்தில் பழிவாங்க குற்றவாளி கூண்டில் ஏற்ற ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தை பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுக்கள் வலுத்துவருகின்ற நிலையில் பயனற்ற கூட்டங்களாக மாறிவிடலாமென்ற அச்சம் தோன்றியுள்ளது.



No comments