சவேந்திரசில்வாவும் நிர்வாணமாய் வெளியே!



கோத்தபாய ராஜபச்வை தொடர்ந்து மற்றொரு போர் வீரனென தெற்கில் காண்பிக்கப்பட்ட சவேந்திரசில்வாவும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இதனிடையே 2022 ஆம் ஆண்டு 'அரகலய' காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

2022 போராட்டம் ஒரு  உள்நாட்டுக் கலவரம். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச ராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்தேன். நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கங்கள் மோசமானவை அல்லது தீயவை அல்ல, அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவது போல் நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை. ஒரு அந்நிய நாட்டுக்கு சிப்பாயாக அல்லது வெளிநாட்டு தூதரகத்தில் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு இல்லை. அப்படியென்றால் அப்போதைய பிரதமர் போராட்டகாரர்களிடம் சிக்கியபோது, அவரைப் பத்திரமாக மீட்க நான் ஏன் ஏர் மொபைல் படைப்பிரிவை அனுப்ப வேண்டும்? என்றும் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் புதிய அரசு சவேந்திரசில்வாவின் பதவியை நீடிக்க மறுத்து வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சவேந்திரசில்வாவும் நிர்வாணமாய் வெளியே!
கோத்தபாய ராஜபச்வை தொடர்ந்து மற்றொரு போர் வீரனென தெற்கில் காண்பிக்கப்பட்ட சவேந்திரசில்வாவும் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இதனிடையே 2022 ஆம் ஆண்டு 'அரகலய' காலப்பகுதியில் இராணுவத் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் உயிரிழப்பைத் தவிர்க்க விரும்பியதாகவும், ஆனால் தனது உத்தியை ஆட்சியாளர்கள் தவறாகப் புரிந்து கொண்டதாகவும், அது தன்னை ஒரு பாதகமான நிலைக்கு தள்ளியதாகவும் நேற்று ஓய்வு பெற்ற பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
2022 போராட்டம் ஒரு  உள்நாட்டுக் கலவரம். போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த குறைந்தபட்ச ராணுவ பலத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நான் உத்தரவு பிறப்பித்தேன். நிராயுதபாணியான பொதுமக்களுக்கு எதிராக உத்தியோகபூர்வ அதிகாரத்தைப் பயன்படுத்தும் இரக்கமற்ற கொலைகாரனாக மாற எனக்கு விருப்பமில்லை. எனது நோக்கங்கள் மோசமானவை அல்லது தீயவை அல்ல, அதிகார வெறி கொண்ட ஆட்சியாளர்கள் கூறுவது போல் நான் அரசைக் காட்டிக் கொடுக்க முற்படவில்லை. ஒரு அந்நிய நாட்டுக்கு சிப்பாயாக அல்லது வெளிநாட்டு தூதரகத்தில் கைப்பொம்மையாக இருக்க வேண்டும் என்ற தாழ்வு மனப்பான்மை எனக்கு இல்லை. அப்படியென்றால் அப்போதைய பிரதமர் போராட்டகாரர்களிடம் சிக்கியபோது, அவரைப் பத்திரமாக மீட்க நான் ஏன் ஏர் மொபைல் படைப்பிரிவை அனுப்ப வேண்டும்? என்றும் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் புதிய அரசு சவேந்திரசில்வாவின் பதவியை நீடிக்க மறுத்து வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments