வாழைச்சேனையில் சுகயீன விடுமுறையுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்திய கிராம உத்தியோகத்தர்கள்


வாழைச்சேனையில் கடமை நிமித்தம் சென்ற கிராம உத்தியோகத்தர் ஒருவரை தாக்கியவர்களை கைது செய்ய கோரியும் சட்டத்தை அமுல்படுத்தாக பொலிஸாருக்கு எதிராகவும் இன்று (30) கிராம உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறையுடன் கவனயீர்ப்பு போராட்டம் காந்தி பூங்காவில் ஆரம்பித்து பழைய கச்சேரி வரை ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

கடந்த 20 ஆம் திகதி கடமை நிமித்தம் வெளியில் சென்ற கிராம உத்தியோத்தர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்ததையடுத்து மாவட்ட ஐக்கிய கிராம உத்தியோகத்தர் சங்கம் கவனயீர்பு ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுத்ததையடுத்து இன்று காலை 9.30 மணிக்கு சுகயீன விடுமுறையுடன் மட்டு. காந்தி பூங்காவில் கிராம உத்தியோகத்தர்கள் ஒன்று கூடினர்.

இதனையடுத்து  நீதிவேண்டும், கைது செய் கைது செய், சமாதான அலுவல்களான எமக்கு என்ன பாதுகாப்பு, மக்கள் சேவையை செய்யும் எங்களை பொலிஸார் ஏன் புறக்கணிப்பு, பொலிஸாரின் நடவடிக்கை தான் என்ன? தாக்கப்பட்ட கிராம உத்தியோகத்தருக்கு நீதி வேண்டும், அரசகாணி அரச வளங்களை பாதுகாக்கும் எங்களை பாதுகாப்பது யார்?, போன்ற சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக நீதிமன்ற வீதி ஊடாக பழைய கச்சேரியை சென்றடைந்து அங்கு இடம்பெற்றுவரும் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தினையடுத்து அவர்களை வெளியில் பொலிஸார் தடுத்து நிறுத்தியதுடன் மகஜரை கையளிக்க 5 பேரை அனுமதித்த தையடுத்து கூட்டத்திற்கு சென்று  மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான அருண் ஹேமச்சந்திராவிடம் மகஜர் ஒன்றை கையளித்ததனர்.

No comments