மாகாணசபை தேர்தலை நடாத்திமுடிக்க முஸ்தீபு!



மாகாண சபைத் தேர்தல்கள் திருத்த சட்டத்தை இரத்துச் செய்வதன் மூலம் நீண்ட காலமாகத் தாமதமாகி வரும் மாகாண சபைத் தேர்தலை அடுத்த ஆண்டு நடுப் பகுதியில் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைத் தொடர்ந்து, திருத்தப்பட்ட மாகாண சபைத் தேர்தல் சட்டத்தை இரத்துச் செய்வதற்கான பிரேரணை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்றும் அரசு குறிப்பிட்டுள்ளது.

2025 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், மாகாண சபைத் தேர்தல் முறையில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்களை இரத்துச் செய்து பழைய மாகாண சபைத் தேர்தல் முறைக்கு மாற்றுவதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களுக்குப் பிறகுதான் மாகாண சபைத் தேர்தல்களை எதிர்பார்க்க முடியும். எனினும், சட்டத்தில் பொருத்தமான திருத்தங்களை அறிமுகப்படுத்தாவிட்டால்; மாகாண சபைகளுக்கான தேர்தல் செயற்பாடுகளைத் தொடர முடியாதென அரச அமைச்சர் தெரிவித்துள்ளார்.

2018இல் அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான நியமிக்கப்பட்ட மீளாய்வுக் குழு, இரண்டு மாதங்களுக்குள் புதிய எல்லைகளை இறுதி செய்யவிருந்தது. ஆனால், அதன் அறிக்கையை உரிய காலத்தில் சமர்ப்பித்திருக்கவில்லை.

இதன் விளைவாக, 2017 மற்றும் 2018ஆம் ஆண்டுகளுக்கிடையில் ஆயுட்காலம் நிறைவுக்கு வந்திருந்த மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கு முடிந்திருக்கவில்லை.


No comments