மன்னார் ஆட்காட்டிவெளி மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்
மன்னார் ஆட்காட்டி வெளியில் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டன.
தமிழ் தேசிய விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த இரு மாவீரர்களின் தந்தை ஒருவர் பொதுச் சுடரை ஏற்றி எழுச்சி பூர்வமாக நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தார்.
ஆட்காட்டி வெளி மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களின் உறவினர்கள் பெருந்திரளான மக்கள் ,அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள், என ஆயிரக்கணக்கானவர்கள் ஒன்று திரண்டு கண்ணீர் மல்க உணர்வுபூர்வமாக மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர்.
Post a Comment