ரஷ்ய ஆதரவு வேட்பாளர் வென்றதால்: ரூமேனியாவில் வாக்குகளை மீண்டும் எண்ண உத்தரவு!


ரூமேனியாவின் ஜனாதிபதித் தேர்தலின் முதல் சுற்றில் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என்று ருமேனியாவின் உச்ச நீதிமன்றம் நேற்று வியாழனன்று உத்தரவிட்டது. 

அனுமதிக்கப்பட்ட காலக்கெடுவிற்குப் பின்னர் முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டதாகக் கூறி, முதல் சுற்று வாக்கெடுப்பை இரத்து செய்வதற்கான விண்ணப்பத்தை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  

கடந்த ஞாயிற்றுக்கிழமை வலதுசாரி வேட்பாளரும் ரஷ்ய ஆதரவாளருமான  கலின் ஜார்ஜஸ்கு எதிர்பாரதவிதமாக வெற்றியைப் பெற்றார் எனக் குற்றச்சாட்டப்பட்டது. இவருக்கு ஆதரவாக ரிக்டொக் செயலி பரப்புரை செய்தாகக் குற்றம் சாட்டப்பட்டது.

முடிந்த முதல் சுற்றுத் தேர்தலில் கலின் ஜார்ஜஸ் முன்னிலையில் உள்ளார். இரண்டாவது இடத்தில் மத்தியவாதியான எலெனா லாஸ்கோனி இருக்கின்றார். இவர்கள் இருவரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டாம் சுற்றில் போட்டியிடவுள்ளனர்.

லாஸ்கோனி உக்ரைனின் வலுவான ஆதரவாளராகவும், ருமேனியாவின் நேட்டோ உறுப்பினர் ஆதரவாளராகவும் உள்ளார். 

தற்போது ஆளும் அரசாங்கம் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. இவர்கள் ஐரோப்பிய ஒன்றியம், நேட்டோ போன்ற மேற்று நாடுகளின் ஆதரவு நிலைப்பாட்டைக் கொண்டது. இவர் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவிக்கும் நிலைப்பாட்டை உடையது.

No comments