உகண்டாவில் நிலச்சரிவு: 113 பேரைக் காணவில்லை!
ஆபிரிக்க நாடான உகாண்டாவின் கிழக்குப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பேர் உயிரிழந்துள்ளனர் மேலும் 113 பேரைக் காணவில்லை எனக் காவல்துறை கூறுகிறது.
கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகள் தலைநகர் கம்பாலாவிலிருந்து சுமார் 280 கிமீ தொலைவில் உள்ள புலம்புலி மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களை பாதித்தன.
குறைந்தது 40 வீடுகள் அடித்துச் செல்லப்பட்டன். இதனைத் தொடர்ந்து மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாக உகாண்டா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
15 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேபோல் காயமடைந்த ம15 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட உடல்களில் குறைந்தது ஆறு பேர் குழந்தைகள் என்று உகாண்டா செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிழக்கு உகாண்டாவில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்படுவது இது முதல் முறையல்ல.
2010ஆம் ஆண்டு புத்தடாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுமார் 300 பேர் உயிரிழந்தனர். நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் இதுவும் ஒன்றாகும்.
Post a Comment