யாழில் 10 அடி நீளமான முதலை மீட்பு


யாழ்ப்பாணம் கச்சேரி - நல்லூர் மூத்த விநாயகர் கோவில் பகுதியில் உள்ள வீடொன்றின் முன்பாக சுமார் 10 அடி நீளமான முதலையொன்று இன்றையதினம் சனிக்கிழமை உயிருடன் பிடிபட்டது. 

 வீதியோரமாக உயிருடன் முதலை இருப்பதாக பொதுமக்கள் தகவலளித்த நிலையில் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களால் முதலை பிடிக்கப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. 

 யாழ் மாவட்டத்தில் நிலவிவரும் மழையுடனான வெள்ளப்பெருக்கு காரணமாக அருகில் உள்ள குளத்தில் இருந்த முதலை வீதிக்கு வந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

No comments