பாலியல் லஞ்சம் கோரும் இலங்கை காவல்துறை!

 


யாழ்ப்பாணத்தில் பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் மற்றும் 12 லட்சம் ரூபா பணமும் கோரிய இரண்டு இலங்கை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை வைத்து, பெண்ணின் வீட்டைக் பலாலி காவல்நிலையத்தை சேர்ந்த காவல்துறையினர் கண்டுபிடித்துள்னர்.

பெண் தனது காதலனுடன் இருக்கும் காணொளியை காண்பித்து மிரட்டியதுடன், அவரிடம் பாலியல் இலஞ்சமும் பணமும் கோரியுள்ளனர்.

இந்நிலையில், காவல்துறையினரின் மிரட்டல்கள் மற்றும் பாலியல் இலஞ்சம் கோரியமைக்கான ஆதாரங்கள் என்பவற்றைத் திரட்டிய பெண் சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

முறைப்பாட்டுக்கு அமைய, மேலதிக நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையினர், இரண்டு காவல்துறையினரையும் கைது செய்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில் சந்தேகநபர்களான காவல்துறை உத்தியோகத்தர்கள் இன்று (22) நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

முன்னதாக இரண்டு காவல்துறையினரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments