லெபனான் - சிரியாவை இணைக்கும் சாலை இஸ்ரேலின் தாக்குதலில் துண்டிப்பு


லெபனானை சிரியாவுடன் இணைக்கும் ஒரு முக்கிய சாலை இஸ்ரேலிய தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக இன்று காலை செய்திகள் வெளியாகியுள்ளன.

லெபனானின் போக்குவரத்து அமைச்சர் ராய்ட்டர்ஸிடம் மஸ்னா எல்லைக் கடவைக்கு அருகில் லெபனான் எல்லைக்குள் ஒரு இஸ்ரேல் தாக்கியதாகவும், நான்கு மீட்டர் (12 அடி) அகலமான பள்ளத்தை உருவாக்கியது என்றும் கூறினார். லெபனானின் அதிகாரபூர்வ செய்தி நிறுவனமும் சாலை துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கிறது.

ஹிஸ்பொல்லாவை லெபனானுக்கு இராணுவ உபகரணங்களைக் கொண்டு செல்ல  இச்சாலையைப்   பயன்படுத்தியதாகவும் ஆயுதங்களை கடத்துவதை இஸ்ரேல் அனுமதிக்காது என இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) இராணுவப் பேச்சாளர்  குற்றம் சாட்டியிருந்தார்.

இதனால் லெபனானில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து சிரியாவுக்குள் நுழைய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.


No comments