பேர்லினில் ஒருவர் சுட்டுக்கொன்றது காவல்துறை
யேர்மனியில் 49 வயது நபரைத் துப்பாக்கியால் மிரட்டிய நபரை யேர்மனிக் காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்னர்.
இச்சம்பவம் தலைநகர் பேர்லினில் நேற்று சனிக்கிழமை நடந்தது.
விரட்டப்பட்ட 49 வயதுடைய நபருக்கு எதுவித காயங்களும் ஏற்படவில்லை. அவர் காவல்துறைக்கு அழைப்பு ஏற்படுத்தியதால் அவ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் 46 வயதுடைய ஆயுததாரியைப் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.
டிரைலின்டென்ஸ்ட்ராஸில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்திற்குள் ஓடுவதைக் கண்டார்.
சந்தேகநபர் குடியிருப்பு பகுதியில் வீட்டில் மறைந்திருந்தார். அவர் காவல்துறையினர் கதவைத் தட்டியபோது கதவைத் திறக்கவில்லை.
இதைத் தொடர்ந்து வீட்டுக்குள் நுழைவதற்கு காவல்துறையினர் நீதிமன்ற உத்தைவைப் பெற்றனர்.
அவர்கள் கததை உடைத்துக்கொண்டு உள்ளே நுழைந்தபோது ஆயுததாரி காவல்துறையினரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். ஆயுததாரியை நோக்கி காவல்துறையினர் திருப்பிச் சுட்டபோது அந்த நபர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்வில் பேர்லின் மாநில குற்றப்பிரிவு காவல்துறை அலுவலகம் வழக்கு விசாரணையைத் தொடங்கியது.
ஜேர்மனியில் மூன்று பேர் கொல்லப்பட்டு 8 பேர் காயமடைந்து நாட்டையே உலுக்கிய கொடூரமான கத்தி தாக்குதலுக்குப் பிறகு , கத்திகள் மற்றும் துப்பாக்கிகளைப் பயன்படுத்தி செய்யப்பட்ட குற்றங்கள் ஜெர்மனியில் கவனத்தை ஈர்த்துள்ளன.
Post a Comment