ஆதரவால் சஜித் வெற்றியை நோக்கி!:சுமா



பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது என எம்.ஏ.சுமந்திரன் மீண்டும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்கு தமிழரசு கட்சி எடுத்த முடிவை தொடர்ந்து வடக்கு மற்றும் கிழக்கில் மாற்றங்கள் தோன்றியுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்

தற்போது ஐக்கிய மக்கள் சக்தியின் சஜித் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் அனுரகுமார திஸாநாயக்க ஆகிய இருவரே முக்கிய வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில் "நாங்கள் சஜித்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்," என்று எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பா.அரியநேத்திரன் தேர்தலில் போட்டியிடுவதால் தமிழ் சமூகத்திற்கு எந்த நன்மையும் கிடைக்காது. 2019 தேர்தலில் நாங்கள் சஜித்தை ஆதரித்தோம், 2024ஆம் ஆண்டிலும் அவருக்கு ஆதரவளிப்போம் என எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சஜித், அனுர மற்றும் ரணில் விக்கிரமசிங்க மத்தியில் வாக்குகள் பிளவுபட்டிருந்த நிலையில், சஜித்துக்கு அதரவளிக்க தமிழரசு கட்சி எடுத்த முடிவினால் இப்போது தேர்தல் களம் மாறியுள்ளது என்றும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆயினும் சஜித்துடன் முறையான உடன்பாடு இல்லை .எங்களுக்கு அனுரவை நன்றாகத் தெரியாது.ரணிலை நாங்கள் நன்கு அறிந்துள்ளதால் அவரை நிராகரித்தோம் .கடந்த காலங்களில் தமிழர்கள் ராஜபக்சக்களுக்கு எதிராக வாக்களித்ததால் ரணில் வடக்கு மக்களின் வாக்குகளை வென்றார்.

ஆனால் தற்போது அவர் ராஜபக்ச அணியுடன் இணைந்திருப்பதால், ரணில்-ராஜபக்ஷ கூட்டணிக்கு எங்கள் மக்கள் ஆதரவளிக்க மாட்டார்கள் எனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.


No comments