கிளிநொச்சியில் உந்துருளி விபத்து: விசுவமடுவைச் சேர்ந்த இளைஞன் பலி!
கிளிநொச்சி ஆனையிறவு சோதனைச் சாவடிக்கு முன்னால் இன்று வெள்ளிக்கிழமை (09) காலை உந்துருளியில் வேக கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
விசுவமடு ரெட்பாரா பகுதியில் இருந்து இருவர் உந்துருளியில் யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த போது வேகக் கட்டுப்பாட்டை இழந்து இராணுவத்தின் சோதனைச் சாவடியுடன் மோதி, எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடனும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.
விசுவமடு ரெட்பானா பகுதியைச் சேர்ந்த காந்தரூபன் கலையரசன் என்னும் 21 வயது உடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
விபத்தில் மூன்று பேர் படுகாயம் அடைந்த நிலையில் மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் , இச்சம்பவம் தொடர்பாக கிளிநொச்சி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
Post a Comment