பிரேசிலில் அலுவலகத்தை மூடி வணிகத்தை நிறுத்தியது எக்ஸ் தளம்


தணிக்கை உத்தரவுகளை மீறி பிரேசிலிலில் அமைந்துள்ள எக்ஸ் தளத்தின் அலுவலகத்தை மூடுவதாக அதன் உரிமையாளர் எலன் மக்ஸ் அறிவித்துள்ளார்.

பிரேசிலில் எக்ஸ் வலைதளத்தில் முன்னாள் அதிபர் ஜெயிர் பொல்சினேரோவுக்கு ஆதரவான தீவிர வலதுசாரி கருத்துக்கள், வெறுப்புணர்வு கருத்துக்கள், போலி செய்திகளை நீக்கும்படி எக்ஸ் நிறுவனத்திற்கு அந்நாட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அலெக்சான்டிரி டி மொரேஸ் உத்தரவிட்டார்.

நீதிபதி உத்தரவால் ஏற்கனவே முடக்கப்பட்ட எக்ஸ் கணக்குகளை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக எக்ஸ் தலைவர் எலான் மஸ்க் அறிவித்தார். இதனால், எலான் மஸ்கிற்கு எதிராக நீதிபதி மொரேஸ் விசாரணையை தொடங்கினார். இதனால் இந்த விவகாரம் பூதாகாரமானது.

இதனிடையே, எக்ஸ் தளத்தில் இருந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை நீக்கக்கோரி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தக்கோரி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி மொரேஸ் தெரிவித்துள்ளார். அதேவேளை, உத்தரவை கடைபிடிக்கவில்லையென்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் பிரேசிலில் செயல்பட்டு வரும் எக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சட்ட நிபுணரை கைது செய்வோம் என்றும் நீதிபதி மொரேஸ் மறைமுக எச்சரிக்கை விடுத்ததாக தகவல் வெளியானது.

இந்நிலையில் பிரேசிலில் உள்ள மக்கள் இன்னும் எக்ஸ் தளத்தைப் பயன்படுத்த முடியும் என்று கோடீஸ்வரர் எலோன் மஸ்க்கின் எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். ஆனால் எக்ஸ் தளத்தின் பிரேசில் அலுவலகத்தை மூடுவது என்ற முடிவு கடினமானது என்று மக்ஸ் தெரிவி்த்தார்.


No comments