திருமலைக் கடற்கரையில் கரையொதுங்கும் சிவப்பு நண்டுகள்!
திருகோணமலை நகரில் உள்ள கடற்கரையில் இன்று (10) அதிகாலை முதல் இலட்சக்கணக்கான சிறு சிவப்பு நிறத்திலான நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன.
வார இறுதி நாட்களில் இப்பிரதேசத்துக்கு கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகின்ற நிலையில் இவ்வாறான நிகழ்வு ஒன்று இடம்பெற்று உள்ளது.
இது தொடர்பான நடவடிக்கையில் திருகோணமலை நகர செயலாளர் ஈடுபடுவதாக உறுதியளித்தார். சுமார் 5 – 6 மீற்றர் நீளமுள்ள இந்த கடற்கரையில் 3 – 4 கிலோ மீற்றர் தூரம் வரை இவ்வாறான சிவப்பு நிற நண்டுகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment