நல்லூர் தடை:பிக்குகளிற்கு இல்லையாம்




நல்லூர் ஆலய திருவிழா காலத்தில் பக்தர்களது வருகையினை மட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள இரும்பு வேலி சர்ச்சைகள் மத்தியில் அதனை புறந்தள்ளி புகுந்த பிக்குகள் விடயம் சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

இன்றைய தினம் பிக்குகள் வாகனத்தில் ஆலய முன் பக்க வாயிலில் இரும்பு தடைகளை தாண்டி வருகை தந்து இறங்கியுள்ளார்.

இலங்கை அரசியல் அமைப்பில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதோடு ஏனைய மதங்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியல் அமைப்பு கூறுகிறது.

ஆதனை தான் நல்லூர் ஆலய நிர்வாகம் கடைப்பிடித்து பிக்குகளிற்கு முன்னுரிமையளித்ததாவென்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே நல்லூர் ஆலய சூழலில் பொதுமக்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வீதி தடைகள்  தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்தியாக்காரியாலத்தில் நேற்று இடம்பெற்றது.

இதன்போது கருத்துதெரிவித்த யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர், இவ்விடயம் தொடர்பில் பொலிஸ் தரப்பினரிடமும், நல்லூர் ஆலய நிர்வாகத்தினருடனும் கலந்துரையாடி பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் மற்றும் ஆபத்துகள்  ஏற்படாத வகையில் வீதி தடைகள் அமைக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக தெரிவித்தார். 

இது தொடர்பில் யாழ் மாநகர சபை ஆணையாளரின் நடவடிக்கையினை அடுத்து எமது மேலதிக கலந்துரையாடல் இடம்பெறும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்தார்.



No comments