சூடானில் அணை உடைந்து: 30 பேர் பலி!! பலரைக் காணவில்லை!! ஆயிரக்கண்கானோர் பாதிப்பு!
சூடானின் கிழக்குப் பகுதியில் பெய்த கனமழையில் ஒரு அணை உடைந்ததால் கிட்டத்தட்ட 20 கிராமங்கள் அழிந்தன. இந்த அனர்த்தத்தில் குறைந்தது 30 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர். சுமார் 150-200 பேரைக் காணவில்லை என்று ஒரு அவசரகால பணியாளர் கூறினார்
நடைமுறை தலைநகர் போர்ட் சூடானில் இருந்து வடக்கே 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள அர்பாத் அணை, தொடர் மழையின் போது கடுமையான சேதத்தை சந்தித்தது. துறைமுகம் மற்றும் விமான நிலையம் உள்ள நகரத்திற்கு இது முக்கிய நீர் ஆதாரமாக இருந்தது. சூடானுக்கான உதவி விநியோகங்கள் பெரும்பாலும் அங்கு அனுப்பப்படுகின்றன.
இந்த அணை உடைப்பால் அப்பகுதிகள் அடையாம் தெரியாத அளவுக்கு அழிவு ஏற்பட்டது. மின்சாரம் மற்றும் நீர்க் குழாய்கள் அழிக்கப்பட்டன.
50 ஆயிரம் வரையிலான மக்களின் வீடுகள் பாதிக்கப்பட்டன. அவர்களுக்கு தங்மிடம், உணவு, தண்ணீர் என்பன தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு மழை மற்றும் வெள்ளம் காரணமாக குறைந்தது 132 பேர் உயிரிழந்துள்ளதாக சூடானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 2023 இல் தொடங்கிய சூடான் இராணுவத்திற்கும் விரைவுப் படை துணை இராணுவத்திற்கும் இடையில் நிலவும் அமைதியின்மை காரணமாக சூடான் முழுவதும் உள்ள உள்கட்டமைப்பு புறக்கணிப்பு மற்றும் சீரழிவை எதிர்கொள்கிறது .
மோதலில் ஈடுபட்டுள்ள இரு தரப்பினரும் உதவித் தொடரணிகளுக்கான அணுகலைத் தடுக்கின்றனர் என ஐக்கிய நாடுகள் சபை கூறுகிறது.
சூடானில் ஒவ்வொரு நாளும் குறைந்தது 100 பேர் பசியால் இறக்கின்றனர். குறைந்தது 30% குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் இறக்கின்றனர் என்று ஐ.நா தெரித்தது.
சண்டையால் நாட்டில் 10 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் எல்லைகளைத் தாண்டி ஓடிவிட்டனர்.
உலகின் மிகப்பெரிய அகதிகள் நெருக்கடி சூடானில் உள்ளது என ஐ.நா மேலும் தெரிவித்தது.
Post a Comment