மண் மாபியா:மயூரன் அம்பலப்படுத்தும் போராட்டக்குழு!



பூநகரி பொன்னாவெளியில் கனியவளத்திணைக்கள பங்கெடுப்புடன் முன்னெடுக்கப்படவிருந்த பாரிய முருகைக்கல் அகழ்வு எவ்வாறு தடுக்கப்பட்டதோ அதே போன்று மக்கள் வீதிகளில் களமிறங்கி பாரிய போராட்டத்தின் மூலம் அரச அலுவலகங்களை முடக்கி போராட்டங்களை முன்னெடுத்து கௌதாரிமுனை –பரமன்கிராய் பகுதிகளை காக்கப்போவதாக மக்கள் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

அத்துடன் ஒட்டுமொத்த மக்கள் போராட்ட குழு அழைப்பின் பேரில் எதிர்வரும் 9ம் திகதியினுள் வழங்கப்பட்ட புதிதாக மணல் அகழ வழங்கப்பட்ட பெமிட் அனுமதிகள் இரத்துச்செய்யப்படாவிட்டால் பின்வரும் விபரப்படியாக கிளிநொச்சி மாவட்டம் தழுவிய போராட்ட நடவடிக்கைகளிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே மக்கள் பயணிக்க கௌதாரிமுனை வீதியை திருத்தி தர இயலாத வடமாகாண வீதி அபிவிருத்தி திணைக்களம் மணல் எடுத்துச்செல்ல வீதியை அனுமதித்தமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

கனிய வளத்திணைக்கள வடமாகாண பணிப்பாளர் மயூரன் உடனடியாக இடமாற்றம் செய்யப்படாதவிடத்து மாவட்ட செயலகம் மற்றும் பூநகரி பிரதேசசெயலக அலுவலக முற்றுகைப்போராட்டத்தை முன்னெடுப்போம்.அவரது யாழ்ப்பாணத்திலுள்ள ஆடம்பர பங்களா முன்னதாகவும் முற்றுகை போராட்டத்தை முன்னெடுப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

குறித்த மயூரன் என்பவர் தற்போது கிழக்கில் கைதான மண் மாபியா குழுக்களது நண்பராகவுள்ளதுடன் தற்போது வடக்கிற்கு இடமாற்றம் பெற்றுள்ளார். கௌதாரிமுனை மற்றும் பரமன்கிராய் மணல் வியாபாரத்தின் பங்காளியாகவுள்ளதுடன் தானே தனது பணியாளர்கள் சகிதம் மணல் முகவர்களை வைத்து வியாபாரத்தை முன்னெடுத்துள்ளார்.கிழக்கில் நடந்தேறிய மணல் மோசடிகளை கௌரவ ஆளுநர் நேரடியாக அறிந்துள்ளார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம் என போராட்டக்குழு அறிவித்துள்ளது. 


No comments