இரவில் ஊடல்:பகலில் கூடல்:டெலோ?
இலங்கையிலுள்ள முஸ்லீம் கட்சிகள் ஆட்சியை கைப்பற்றும் தரப்புடன் ஒட்டிக்கொள்ள பிரிந்து ஆதரவளிக்கின்ற உத்தியொன்றை முன்னெடுப்படுது வழமையாகும்.அதே உத்தியை தமிழீழ விடுதலை இயக்கம் டெலோவும் முன்னெடுத்துள்ளது.
ரணிலின் வெற்றிக்காக தமிழீழ விடுதலை இயக்க தலைவர்கள் அனைவரும் பாடுபட்டுவருகின்றனர.எனினும் வெளியில் ரணிலின் வெற்றிக்காக பாடுபடவில்லையெனவும் பொதுவேட்பாளரிற்காக பாடுபடுவதும் தொடர்கின்றது.
இந்நிலையில் தமிழ் பொதுக்கட்டமைப்பினர் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பினை தேர்தல் முடிவுகள் நிச்சயம் உணர்த்தும் என நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.
பொதுவேட்பாளருக்கு ஆதரவாக நான் பிரச்சாரம் செய்யப்போவதில்லை. அவருக்கு ஆதரவில்லாத நிலைப்பாடுகள் அங்கத்துவ கட்சி உறுப்பினர்களிடத்திலும் உள்ளது.எமது கட்சி உறுப்பினர்களிடத்திலும் இருக்கிறது.
கட்சி எடுத்த முடிவுசரியோ தவறோ என்பதற்கு அப்பால் தனிப்பட்ட ரிதீயிலே அந்த முடிவோடு நான் இணங்கவில்லை. மக்களால் விரும்பம்படுகின்ற மக்கள் தேர்தெடுத்த முடிவாக அதனை நான் கருதவில்லை.
தேர்தல் முடிவுகளிற்கு பின்னர் பொதுக்கட்டமைப்பில் உள்ளவர்கள் திருந்துவதற்கான ஒரு வாய்ப்பை தேர்தல் நிச்சயமாக கொடுக்கும்.
குறிப்பாக தேர்தலில் நிற்கும் மூன்று வேட்பாளர்களின் பெயர்கள் மக்கள் மனங்களிலே இருக்கின்றது. மக்கள் தீர்க்கமான சரியான முடிவை எடுப்பார்கள்.பெரும்பாண்மையான மக்கள் எடுத்த முடிவிற்கு ஆதரவாக நானும் செயற்படுவேன்.
அதேவேளை. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் பலதடைவைகளுக்கு மேல் சந்தித்திருக்கின்றேன் எனவும் விநோ தெரிவித்துள்ளார்.
கட்சியுடன் முரண்பட்டு;ளளதாக தெரிவிக்கப்படும் அவர் நேற்றைய தினம் கட்சி தலைவர் சகிதம் யாழ்ப்பாணத்தில் பொது நிகழ்வில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment