வெளிவருகின்றது தமிழ் தரப்பின் பட்டியல்?


கூட்டமைப்பு மற்றும் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் ஆதரவு நிலைப்பாட்டை எடுக்குமிடத்து மதுபானச்சாலை அனுமதிப்பத்திரங்களை இலஞ்சமாகப்பெற்றுக்கொண்டமை தொடர்பில் அம்பலப்படுத்தப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு சில தினங்களுக்கு முன்னர் கட்சித்தாவுவதற்கு பணம் மற்றும் மதுபானசாலை அனுமதிப் பத்திரங்களைப் பெற்றுக் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழுமையான பெயர் பட்டியலை பகிரங்கப்படுத்த சஜித் ஆதரவு எதிர்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் தயாராகியுள்ளனர்.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தி மேடையில், கட்சித் தாவலுக்காக மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுக் கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் பெயர்களை தெரிவித்திருந்தார்.

அப்பட்டியலில் வேலுக்குமார்,அங்கயன் இராமநாதன்,வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெயர் வெளியாகியிருந்தது.

எனினும் பட்டியலில் தமிழரசு மற்றும்  தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உள்ளடங்கியிருக்கவில்லை.

எதிர்வரும் நாட்களில் அந்தமுழு பெயர் பட்டியலையும் பகிரங்கப்படுத்த தாம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அதன்படி, தேர்தலுக்கு முன்னர் பணம் மற்றும் வரப்பிரசாதங்கள் மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் பெற்று கட்சித்தாவிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழுமையான பெயர் பட்டியல் பகிரங்கப்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில் ரணிலுக்கு ஆதரவாக கைதூக்கும் தமிழரசு மற்றும்  தமிழ் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பட்டியலும் வெளியாகலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.


No comments