கிளிநொச்சியும் காணாமல் போகலாம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் முக்கிய நீர் ஆதாரமாக உள்ள குளங்கள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திற்கான முக்கிய நீரேந்து மையமான கிளிநொச்சி குளமும் மண் நிரப்பி ஆக்கிரமிக்கப்படுகின்றமை அம்பலமாகியுள்ளது.
இதனிடையே கிளிநொச்சி மாவட்டத்தில் நீர்ப்பாசனத் திணைக்களத்திற்கு சொந்தமான 8 பாரிய நீர்ப்பாசன குளங்களும், கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான 465 சிறிய குளங்களும் காணப்படுகின்றன என கிளிநொச்சி மாவட்ட செயலக புள்ளிவிபரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதில் கமநல சேவைகள் திணைக்களத்திற்குச் சொந்தமான 464 சிறிய குளங்களில் 126 குளங்களே தற்போது பயன்பாட்டில் உள்ளன. மிகுதி 339 குளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளன. அல்லது காணாமல் போய்விட்டன.
எஞ்சிய 126 குளங்களிலும் பல வருங்காலத்தில் காணாமல் போய்விடும் நிலைமையே காணப்படுகிறது. குளங்கள் காணாமல் போக போக நல்ல நிலத்தடி நீரும் காணால் போகிறது அதன் விளைவுகளே பல கிராமங்கள் காணாமல் போயிருகின்றன. எதிர்காலத்தில் இன்னும் பல கிராமங்கள் காணாமல் போகுமென சுற்றுச்சூழல் ஆர்வலர் முருகையா தமிழ் செல்வன் அம்பலப்படுத்தியுள்ளார்.


Post a Comment