ஆங்கிலக் கால்வாயில் 4 புலம்பெயர்ந்தவர்கள் பலி!!


பிரித்தானியாவுக்கு செல்வதற்காக ஆங்கிலக் கால்வாயைக் கடக்கும் முயற்சியின் போது படகு கவிழ்ந்ததில் நான்கு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக பிரெஞ்சு கடலோர காவல்படை தெரிவித்துள்ளது. மேலும் 63 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

ஒரே இரவில், வடக்கு பிரான்சில் Boulogne-sur-Mer கடற்கரையில் புலம்பெயந்தவர்கள் கடலில் மூழ்கியதாகக் கடற்படையின் ரோந்துப் படகு தெரிவித்தது. படகில் 67 பேர் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

உலங்கு வானூர்தி மூலம் கடலில் மூழ்கியவர்கள் மீட்கப்பட்டனர்.

No comments