திண்டாடும் சுமந்திரன் அணி!
தமிழரசு கட்சி தலைவராக தெரிவான சிவஞானம் சிறீதரனை பதவி கவிழ்க்க ஆதரவாளர்கள் சகிதம் வழக்குக்களை தாக்கல் செய்த எம்.ஏ.சுமந்திரன் தரப்பு திண்டாட தொடங்கியுள்ளது.
சிவில் வழக்குகளில் இணக்கத் தீர்வுக்கான வாய்ப்பு இருக்குமாயின், அந்த வாய்ப்புக் குறித்து நீதிபதி, சம்பந்தப்பட்ட வழக்காளிகள், அவர்களின் சட்டத்தரணிகள் ஒரு மேசையிலிருந்து கலந்துரையாடி பூர்வாங்கத் தீர்மானம் எடுக்கும் விளக்கத்துக்கு முன்னரான கலந்துரையாடல் முறைமை தமிழரசுக் கட்சி வழக்கில் முனெடுக்கப்படவிருக்கின்றது என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் இன்று தகவல் வெளியிட்டார்.
அத்தகைய முறைமைக்கு வழி செய்யும் சட்ட திருத்தம் குடியியல் நடவடிக்கைச் சட்டக்கோவையில் கடந்த ஆண்டு இறுதியில் கொண்டுவரப்பட்டு, பல வழக்குகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.அதுவே தமிழரசுக் கட்சி வழக்கிலும் பின்பற்றப்படவுள்ளது.
பொதுவாக வழக்கை எந்த அடிப்படையில் முடிவுறுத்தலாம் என்பது இணங்கப்பட்டிருக்கின்றது. எட்டு எதிராளிகளையும் 19 ஆம் திகதி வழக்கில் அழைப்பார்கள். கடைசியாக இடையீட்டு மனுவை முன்வைத்த ஜீவராஜா என்பவருடைய இடையீட்டு மனு தொடர்பான விடயமும் 19 ஆம் திகதி இருக்கின்றது. அவ்விடயத்தால் வழக்குத் தள்ளிப் போகக் கூடிய சில சந்தர்ப்பங்கள் ஏற்படலாமெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கட்சி முடக்கப்படவில்லை. கட்சியினுடைய செயற்பாடுகள் எதுவும் முடங்கவில்லை. கட்சியின் சின்னம் முடக்கப்படவில்லை. கட்சி முழுமையாக செயற்பட்டுக் கொண்டே இருகின்றது. கட்சியின் சின்னத்தின் கீழ் எந்தத் தேர்தலையும் நாம் சந்திக்க முடியும். அதற்கு எந்தவிதமான இடர்பாடுகளும் கிடையாதெனவும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
Post a Comment