ரஷ்யாவில் பணயக் கைத்திகள்: ஐ.எஸ் ஆயுததாரிகளை அழித்த ரஷ்யாவின் சிறப்புப் படைகள்!!
தெற்கு ரஷ்யாவில் விசாரணைக்கு முன்னர் தடுத்து வைக்கும் தடுப்பு மையத்தில் இரண்டு காவலர்களைச் சிறைபிடித்துச் சென்ற கைதிகளை அழித்துவிட்டதாக ரஷ்ய சிறப்புப் படைகள் கூறுகின்றன. கைதிகளில் சிலர் ஐ.எஸ் ஆயுதக் குழுவைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிடப்பட்டது.
ரஷ்யாவின் சிறப்புப் படைகள் இஸ்லாமிய அரசு குழுவுடன் தொடர்புடைய பலரைக் கொன்றனர். அவர்கள் இரண்டு காவலர்களை பணயக் கைதிகளாக தெற்கு நகரமான ரோஸ்டோவில் உள்ள தடுப்பு மையத்தில் வைத்துள்ளதாக இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.
பணயக் கைதிகளாக இருந்தவர்கள் காயமின்றி விடுவிக்கப்பட்டனர் ஷ்யாவின் பெடரல் பெனிடென்ஷியரி சர்வீஸ் ஒரு அறிக்கையில் கூறியது.
ரோஸ்டோவ் பிராந்தியத்தின் தடுப்பு மையம் 1 இல் ஞாயிற்றுக்கிழமை இந்த முற்றுகை இடம்பெற்றதாக சிறைச் சேவை தெரிவித்துள்ளது.
ஆறு பணயக்கைதிகள் இருந்ததாக Interfax செய்தி நிறுவனம் கூறியது. அவர்கள் கத்திகள் மற்றும் பிற கூர்மையாக்கப்பட்ட பொருள்களுடன் ஆயுதம் ஏந்தியிருந்தாக கூறப்படுகிறது.
பணயக் கைதிகளில் சிலர் பயங்கரவாத குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர், மற்றவர்கள் ஏற்கனவே குற்றவாளிகள் என்று காவல்துறை ஆதாரத்தை மேற்கோள் காட்டி அரச செய்தி நிறுவனமான TASS தெரிவித்துள்ளது.
காகசஸில் உள்ள முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள ரஷ்ய குடியரசின் கராச்சே-செர்கெசியாவின் உச்ச நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்த சதி செய்த குற்றவாளிகளில் இவர்களும் இருக்கலாம் என்று ரஷ்ய ஊடகங்கள் ஊகித்தன.
Post a Comment