தேசிய அரசியலை முடக்க புது உக்தி!
ஒருபுறம் ஜனாதிபதி தேர்தல் ஆதரவு திரட்ட வடகிழக்கிற்கு சிங்கள தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர்.ஆனாலும் தமிழர் தாயகத்தில் ஜனநாயக அரசியலை முடக்க தமது கட்டமைப்புக்களை பயன்படுத்தியேவருகின்றனர்.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவர் மற்றும் தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஆகிய இருவரையும் விசாரணைக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு அழைத்துள்ளது.
எதிர்வரும் 11,12 ம் திகதிகளில் மட்டக்களப்பிலுள்ள பயங்கரவாத தடுப்பு அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மாவட்ட தமிழரசுக்கட்சி வாலிபர் அணி முன்னாள் தலைவரும் அபிவிருத்தி உத்தியோகத்தருமான லோ. திபாகரனை எதிர்வரும் திகதி 11ம் திகதி விசாரணைக்குவருமாறு கடிதம் ஒன்றை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வழங்கியுள்ளனர்.
அதேவேளை, தமிழ் இளையோர் மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளரும் மனிதவுரிமை செயற்பாட்டாளருமான கொக்கட்டிச்சோலையைச் சேர்ந்த ஜீவரெத்தினம் தவேஸ்வரனையும் எதிர்வரும் 11, 12 ம் திகதிகளில் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த காலம் ஒரே நாளில் 11 மணித்தியாலம் 45 நிமிடங்கள் தடுத்துவைக்கப்பட்டு மட்டக்களப்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் ஜீவரெத்தினம் தவேஸ்வரனிடம் வாக்குமூலம் பெறப்பட்ட நிலையில் புதிய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Post a Comment