ஓமந்தையில் வீட்டு சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாத குழந்தை உயிரிழப்பு
ஓமந்தை - புதியவேலர் - சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றின் வரவேற்பறை சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் குழந்தையொன்று உயிரிழந்தது.
இந்த விபத்து நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 02 மாத குழந்தையே உயிரிழந்தது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Post a Comment