மகாவலி அபிவிருத்தியின் பெயரால் தமிழர் நிலங்களை அபகரிக்காதே .. - யாழில் போராட்டம்


மகாவலி அபிவிருத்தியின் பெயரால் மேற்கொள்ளப்படும் நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய் மற்றும்  கருநாட்டுக்கேணி பிரதேச மக்கள் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். 

வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் புதன்கிழமை காலை 10 மணியளவில், குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதனையடுத்து அப்பகுதியில் பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை அபகரிக்காது மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து, எமது வாழ்வாதாரத்தை பறிக்காதே, மகாவலி அபிவிருத்தி முல்லைதீவில் பௌத்த மயமாக்கலுக்கா, எமக்கு நீதி வேண்டும், மகாவலி திட்டத்தை எமது மண்ணில் நிறுத்து என்ற பதாகைகள் தாங்கியவாறு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டத்தின் முடிவில் மகாவலி நில ஆக்கிரமிப்பு தொடர்பாக ஆளுநரின் செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.






No comments